சென்னையைக் குலுக்கிய திமுக மகளிர் பேரணி
சென்னை:மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக மகளிர் அணி சார்பில்சென்னையில் பிரமாண்டப் பேரணி நடைபெற்றது.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றக் கோரி தமிழகம் முழுவதும் சமீபத்தில் திமுக மகளிர் அணி சார்பில் பிரமாண்டப் பேரணிகள்நடைபெற்றன. சென்னையில் மாநகராட்சி மறு தேர்தல் காரணமாக நடைபெறவில்லை.
இந்த நிலையில் நேற்று சென்னையில் மகளிர் அணி சார்பில் பேரணி நடத்தப்பட்டது. மன்ரோ சிலையில் தொடங்கிய பேரணி சேப்பாக்கம்விருந்தினர் மாளிகையை வந்தடைந்தது.
பேரணியில் அமைச்சர்கள் பூங்கோதை, தமிழரசி, கவிஞர் கனிமொழி, இந்திரகுமாரி, சற்குணபாண்டியன், மகளிர் அணிச் செயலாளர் சங்கரிநாராயணன் உள்ளிட்டோர் நடந்து வந்தனர்.
திமுக கொடிகளுடன் திமுக மகளிர் அணியினர் அணிவகுத்து வந்தனர். இந்த பேரணியை, சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகேஅமைக்கப்பட்டிருந்த தனி மேடையில் இருந்தபடி முதல்வர் கருணாநிதி பார்வையிட்டார். அவருடன் அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி,மு.க.ஸ்டாலின் உளிளிட்டோரும் பார்வையிட்டனர்.
ஊர்வலத்தில் வந்த மகளிர் அணியினரின் உடைகள் வித்தியாசமாக இருந்தன. ஒவ்வொரு பகுதி மகளிர் அணியினருக்கும் ஒரு வண்ணத்தில் சேலை,ஜாக்கெட் என பிரிக்கப்பட்டிருந்ததால், விதம் விதமான வண்ணங்களில் உடை அணிந்து பெண்கள் அணிவகுத்து வந்தது கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது.
ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்ட இந்தப் பேரணியை முதல்வர் கருணாநிதி சுமார் 2 மணி நேரம் அமர்ந்து பார்வையிட்டார்.












Click it and Unblock the Notifications