கிரிக்கெட் பார்க்க டிவி கேட்கும் கைதி
சென்னை:உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிகளைப் பார்த்து ரசிக்க, தனது சிறை அறையில், சொந்தச் செல்வில் செட் டாப் பாக்ஸ் வசதியுடன், டி.வி.வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரி சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதி, வழக்குப் போட்டுள்ளார்.
சென்னை புழல் மத்திய சிறையில் அப்துல் ரகீம் என்ற கைதி அடைக்கப்பட்டுள்ளார். 1993ம் ஆண்டு சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் நடந்தகுண்டுவெடிப்புச் சம்பவத்தில் இவர் கைது செய்யப்பட்டு விசாரணைக் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் 2வது தடா நீதிமன்றத்தில் அப்துல் கரீம் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் மார்ச் 13ம் தேதி முதல் உலகக் கோப்பைக் கிரிக்கெட்போட்டி தொடங்குகிறது. இந்தப் போட்டிகளை நான் பார்த்து ரசிக்க விரும்புகிறேன்.
கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சி சேனல் சிறையில் உள்ள டிவியில் தெரிவதில்லை. எனவே எனது சொந்தச் செலவில் டிடிஎச்வசதியுடன், எனது அறையில் டிவி வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
இதுதொடர்பாக சிறை நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், புழல் மத்திய சிறையில், கைதிகளுக்கு தொலைக்காட்சி வசதி செய்துதரப்பட்டுள்ளது. இதில் தூர்தர்ஷன் நிகழ்ச்சிகள் தெரியும். தூர்தர்ஷன் சேனலிலேயே உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்புசெய்யப்படுகின்றன.
சிறைக்குள் செட் டாப் வசதியை ஏற்படுத்த விதிமுறைகளில் இடம் இல்லை. மேலும், கைதிகளுக்கும் வெளியுலகத்திற்குமான தொடர்பை முழுமையாகஅனுமதிக்க முடியாது. டிவி நிகழ்ச்சிகளை சென்சார் செய்து கைதிகளுக்கு காட்டுவது இயலாத காரியம். எனவே இந்த கோரிக்கையை ஏற்கக் கூடாதுஎன்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து வெள்ளிக்கிழமைக்கு மனு மீதான விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications