ராகிங் செய்த 7 நர்சிங் மாணவிகள் சஸ்பெண்ட்
கோவை:கோவையில் உள்ள அரசு செவிலியர் பயிற்சிக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகளை ராகிங் செய்த சீனியர் மாணவிகள் 7 பேர் சஸ்பெண்ட்செய்யப்பட்டனர்.
கல்லூரிகளில் ராகிங்கில் அதிகம் ஈடுபடுவது மாணவர்கள்தான் என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் ஆங்காங்கே பெண்களும், ஆண்களுக்கு சற்றும்சளைக்காமல் ராகிங்கில் ஈடுபடத்தான் செய்கின்றனர்.
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் செவிலியர் பயிற்சிக் கல்லூரி உள்ளது. இங்கு 450 மாணவிகள் படித்து வருகிறார்கள். கல்லூரிக்குஅருகிலேயே விடுதியும் உள்ளது.
விடுதியில் தங்கியிருந்த முதலாமாண்டு மாணவிகள் ஸ்ரீதேவி, திலகம், ரேணுகாதேவி ஆகியோரின் அறைக்குள், 2ம் ஆண்டு படிக்கும்மாணவிகளான சசிகலா, புளோரா, நந்தினி, உஷா, ஹேமா, எஸ்தர், ஜாஸ்மின் லினோ, கீதா ஆகியோர் புகுந்து அங்கிருந்த 3 மாணவிகளையும்ராகிங் செய்துள்ளனர்.
பாட்டுப் பாடுமாறும், ஆடுமாறும் இன்ன பிற செயல்களில் ஈடுபடுமாறும் கூறி ராகிங் செய்ததால் 3 மாணவிகளும் மனதளவில் கடுமையாகபாதிக்கப்பட்டனர்.
தங்களுக்கு நேர்ந்த அவமானம் குறித்து கல்லூரி முதல்வர் கலாநிதிதியிடம் அவர்கள் 3 பேரும் எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து விசாரணை நடத்திய முதல்வர், 7 பேரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேல் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications