யோபு சரவணன் கூட்டாளிக்கு அடி உதை
தக்கலை:கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பூதப்பாண்டியில், மோசடி பிஷப் யோபு சரவணனின் கூட்டாளியை, பணம் கொடுத்து ஏமாந்தகாண்டிராக்டர்கள் அடித்து உதைத்தனர்.
இலவச வீடுகட்டித் தருவதாக நூற்றுக்கணக்கான காண்டிராக்டர்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த யோபு சரவணன் கைது செய்யப்பட்டுசிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தனது மோசடி செயலுக்கு யோபு சரவணன் பல ஏஜென்டுகளை நியமித்திருந்தார். இவர்கள் மூலம்தான் காண்டிராக்டர்களிடம் அவர் பண வசூலைநடத்தினார்.
யோபு கைது செய்யப்பட்டவுடன் இந்த ஏஜென்டுகள் தலைமறைவாகி விட்டனர். குமரி மாவட்டம் பூதப்பாண்டி, அருநல்லூரைச் சேர்ந்தசுவாமிநாதன் ராஜ் என்பவரும் இப்படிப்பட்ட ஏஜென்டுகளில் ஒருவர்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு யோபு சரவணனின் ஏஜெண்டாக இவர் செயல்பட்டு வந்தார். 400 பேரிடம்ரூ. 8 லட்சம் மோசடி செய்துள்ளார்.
ராஜிடம், நெல்லை, கள்ளிகுளத்தைச் சேர்ந்த விக்டர் என்பவர், 100 பேரிடம் ரூ.2 லட்சம் வசூல் செய்து கொடுத்துள்ளார். சுவாமிநாதன் ராஜிடம்பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் பணத்தைத் திருப்பிக் கேட்டுள்ளனர். ஆனால் அவர் பணம் கொடுக்கவில்லை என்று தெரிகிறது.
இதனால் விக்டர், 9 பேருடன் சேர்ந்து சுவாமிநாதன் ராஜை கடத்திச் சென்றார். பத்திரத்தில் கையெழுத்து வாங்கி கொண்டு ஊருக்கு ஒதுக்கு புறமாகஅழைத்துச் சென்று சரமாரியாக தாக்கினர், பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இது தொடர்பாக சுவாமிநாதன்ராஜ் போலீசில் புகார் செய்துள்ளார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications