கூவி அழைத்து விபசாரம்; துணை நடிகை கைது
சென்னை:சென்னை வடபழனி பகுதியில் சாலையில் நின்றபடி விபச்சாரத்திற்கு ஆட்களைக் சேர்த்துக் கொண்டிருந்த விபச்சார புரோக்கர், துணை நடிகைஉள்ளிட்ட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை வடபழனி பேருந்து நிலையப் பகுதியில் விபச்சாரத் தடுப்புப் பிரிவு போலீஸார் இன்று கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போதுபோஸ் என்பவர், விபச்சாரத்திற்கு ஆட்களைத் திரட்டிக் கொண்டிருந்தார்.
சாலையில் போகிற ஆண்களை அணுகிய அவர், பெண் தேவையா என்று கேட்டுள்ளார். இதையடுத்து அவரை போலீஸார் வளைத்துப் பிடித்தனர்.
விசாரணையில் அவர் ஒரு புரோக்கர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில்அய்யப்பன் தாங்கல் பகுதியைச் சேர்ந்த ஜெயகாந்த் என்பவரையும், அவரது மனைவி ராணியையும் போலீஸார் கைது செய்தனர்.
ராணியை அவரது கணவர் ஜெயகாந்த், போஸின் உதவியுடன் விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளார். 3 பேரும் துணை நடிகர்களாகவும்இருக்கிறார்கள்.
திரைப்படங்கள், டிவி தொடர்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார்களாம். 3 பேரையும் போலீஸார் கைது செய்து மேல் நடவடிக்கைஎடுத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications