கடலில் வந்த பொருள் வெடித்து மீனவர் காயம்
ராமநாதபுரம்:கடலில் மிதந்து வந்த மர்மப் பொருளை எடுத்துப் பார்த்த மீனவர் அது வெடித்ததில் பலத்த காயமடைந்தார். அவரது இரு கைகளும் சிதைந்து போய்விட்டன.
உச்சிப்புளி அருகே உள்ள தர்கா வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் மீனவர் கார்த்திக். இவர் அதே ஊரைச் சேர்ந்த குப்பாண்டி, முனீஸ்வரன், முருகன்ஆகியோரோடு நாட்டுப் படகில் பாம்பனிலிருந்து கடலுக்குள் சென்றார்.
அரியமான் என்ற கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது கடலில் ஒருபொருள் மிதந்து வந்தது. சிவப்பு நிறத்தில் இருந்த அந்தப்பொருளைப் பார்த்த கார்த்திக் அதை எடுத்து திறக்க முயன்றார்.
அப்போது அந்தப் பொருள் பலத்த சப்தத்துடன் வெடித்தது. இதில் கார்த்திக் படுகாயமடைந்தார். இரு கைகளும் சேதமடைந்தன. விரல்கள்அனைத்தும் துண்டாகி விட்டன. இதுதவிர வயிறு, மார்பு, முகம், கழுத்து ஆகிய பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது.
உடனடியாக அவரை ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சக மீனவர்கள் கொண்டு சென்றனர். கடலில் மிதந்து வந்த மர்மப் பொருள் கன்னிவெடியாக இருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications