போபர்ஸ்: ஜார்ஜ் பெர்னாண்டஸ் போடும் குண்டு
டெல்லி:வாஜ்பாய் அமைச்சரைவயில் நான் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தபோது, போபர்ஸ் வழக்கு குறித்து கோப்புகளை பார்க்க வேண்டாம் எனவாஜ்பாய் என்னைக் கேட்டுக் கொண்டார் என முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும், சமதாக் கட்சித் தலைவருமான ஜார்ஜ் பெர்னாண்டஸ்கூறியுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராகவும் ஜார்ஜ் பெர்னாண்டஸ் இருப்பதால் அவரது பேச்சு பாஜகவுக்கு பெரும் அதிருப்தியைக்கொடுத்துள்ளது.
இதுகுறித்து ஜார்ஜ் கூறுகையில், பிரதமராக வாஜ்பாய் இருந்தபோது, நான் பாதுகாப்புத்துறை அமைச்சர் பொறுப்பை ஏற்றவுடன், போபர்ஸ் குறித்தகோப்புகளை திறக்கவே வேண்டாம் என்று என்னை வாஜ்பாய் கேட்டுக் கொண்டார்.
ஏன் அப்படிச் சொன்னார் என்று எனக்குத் தெரியாது. அவர் சொன்னபடியே நான் போபர்ஸ் குறித்துக் கவலைப்படவில்லை என்று கூறியுள்ளார்ஜார்ஜ்.
ஜார்ஜின் இந்த புகாரை பாஜக வன்மையாக மறுத்துள்ளது. இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக செய்தித் தொடர்பாளருமான ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், இந்த நேரத்தில் ஏன் இப்படி ஒரு புகாரை ஜார்ஜ் கூற வேண்டும் என்று தெரியவில்லை.
அவர் ஒரு மூத்த தலைவர், இத்தனை கால தாமதத்திற்குப் பின்னர் இப்படி ஒரு குற்றச்சாட்டை அவர் வைக்க வேண்டிய அவசியம் என்ன?உண்மையில், வாஜ்பாய் காலத்தில்தான் போபர்ஸ் குறித்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
இந்த வழக்கில் தேங்கிக் கிடந்த சட்டப்பூர்வமான பல நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன என்பதை ஜார்ஜ் பெர்னாண்டஸுக்குத் தெரிவிக்கவிரும்புகிறேன் என்றார் பிரசாத்.












Click it and Unblock the Notifications