பெரியாறு: புதுக் குழு அமைக்கும் கேரளா
திருவனந்தபுரம்:முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை அதிகப்படுத்தினால் ஏற்படும் பாதக நிலைகள் குறித்து ஆராய 3 பேர் கொண்ட நிபுணர் குழு ஒன்றைகேரள அரசு அமைத்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை குறைக்கப்பட்ட 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால்அதைப் புறக்கணித்து விட்ட கேரள அரசு, அந்த உத்தரவை செல்லாததாக்கும் வகையில் அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்தது.
இந்தப் பிரச்சினை தொடர்பாக தமிழகம் மற்றும் கேரள முதல்வர்களிடையே டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதேபோலஇரு மாநில அமைச்சர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
பிரச்சினை தொடர்ந்து இழுபறியாக உள்ள நிலையில் புதிய நிபுணர் குழு ஒன்றை கேரள அரசு அமைத்துள்ளது. 112 வயதாகும் முல்லைப் பெரியாறுஅணையின் உயரத்தை உயர்த்தக் கூடாது, அப்படிச் செய்தால் கேரளாவுக்கு பாதகம் ஏற்படும் என்ற தனது கருத்தை வலியுறுத்திச் சொல்வதற்காகஇந்த புதிய நிபுணர் குழுவை கேரளா நியமித்துள்ளது.
இந்தக் குழுவில், கொல்கத்தாவில் உள்ள சமூக அறிவியல் ஆய்வு மையத்தின் மூத்த ஆய்வாளரும், பொருளாதார நிர்வாக ஆணையத்தின் துணைத்தலைவருமான டாக்டர் திருபாய் ஜோதி கோஷ், அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் வன விலங்குகள் ஆய்வுத்துறை தலைவர் டாக்டர் யாஹ்யா,ஒரிசா மாநில முன்னாள் தலைமை வனக் காப்பாளர் சரோஜ் குமார் பட்நாயக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
விரைவில் இந்த குழு முல்லைப் பெரியாறு அணைக்குச் சென்று அதுகுறித்து முழு ஆய்வில் ஈடுபடும். இந்த குழு தரும் ஆய்வு முடிவுகளைஅடிப்படையாக வைத்து தனது வாதத்தை மேலும் உறுதியாக சொல்ல கேரள அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
ஏற்கனவே முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது என்று மத்திய நிர் ஆணையம் அறிக்கை கொடுத்துள்ளது. மேலும், இப்பகுதியல் பூகம்பம்ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அறிவியல், தொழில்நுட்ப அமைச்சர் கபில் சிபலும் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த நிலையில் தனது வாதத்திலிருந்து இறங்கி வர முன்வராத கேரள அரசு புதிதாக ஒரு நிபுணர் குழுவை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications