டெல்லி: போலீஸ்காரர் சுட்டு 5 போலீஸார் பலி
டெல்லி:டெல்லியின் மையத்தில் உள்ள தார்யாகஞ்ச் பகுதியில், சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு போலீஸ்காரர் சக போலீஸ்காரர்கள் மீது சரமாரியாகதுப்பாக்கியால் சுட்டதில் ஐந்து போலீஸார் பரிதாபமாக இறந்தனர்.
இன்று காலை 5.30 மணிக்கு இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. தார்யாகஞ்ச் பகுதியில் உள்ள கோல்ச்சா திரையரங்க வளாகம் அருகே உள்ளதேனா வங்கியில் சிக்கிம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இன்று காலை அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஜெய் சிங் சுபா என்ற போலீஸ்காரர் ஆத்திரமடைந்து தனது கையில் இருந்ததுப்பாக்கியால் சக போலீஸார் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் ஐந்து போலீஸார் ரத்த வெள்ளத்தில் மிதந்தனர்.
அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் ஐந்து பேரும் பரிதாபமாக இறந்தனர். படுகாயம் அடைந்தவர்கள்லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
சக போலீஸ்காரர்களை சுட்டுக் கொன்ற சுபா தப்பி ஓடி விட்டார். அவரைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டெல்லியின் மையப் பகுதியில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications