ராமர் பாலம்தான் நாகையைக் காத்ததாம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி:சுனாமி அலைகள் தமிழகத்தைத் தாக்கியபோது ராமர் பாலம்தான் நாகப்பட்டனம் மாவட்டம் முழுமையாக அழியாமல் காத்தது என்று ஆசியவளர்ச்சி வங்கியின் முன்னாள் ஆய்வாளர் கல்யாண ராமன் கூறியுள்ளார்.

ஆசிய வளர்ச்சி வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆய்வாளரான கல்யாணராமன், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பத்திரிக்கையான ஆர்கனைசரில்ராமர் பாலர் குறித்து ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

அதில் கல்யாணராமன் கூறியிருப்பதாவது:

ராமர் பாலம் ராமாயான காலத்திற்குட்பட்டது. இந்தப் பகுதியில், சேது சமுத்திரம் திட்டத்திற்காக ராமர் பாலத்தை உடைப்பது பெரும் அழிவைக்கொண்டு வரும்.

கடந்த 2004ம் ஆண்டு ஆசிய நாடுகளை சுனாமி தாக்கியபோது தமிழகத்திலும் பெரும் சேதம் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கானோர் உயி>ழந்தனர்.

நாகை மாவட்டத்திலும் பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டது. இருப்பினும் நாகை மாவட்டம் முழுமையாக அழியாமல் காத்தது ராமர் பாலம்தான். நாகைமாவட்டத்தின் தெற்கு மற்றும் தென் மேற்கு பகுதியை தடுப்புச் சுவர் போல இருந்து காத்தது ராமர் பாலம்.

இந்தேனேசியாவின் பந்தா ஏஸ் பகுதியில் கிளம்பிய சுனாமி அலைகள், இலங்கையை சுற்றிலும் பரவி தமிழக கடற்கரைப் பகுதிகளைத் தாக்கியது.பின்னர் கேரளாவுக்கும் அந்த அலைகள் சென்று தாக்கின.

சுனாமி அலைகள் ராமர் பாலத்தை வந்தடைந்தபோது பாலத்தின் வலிமை காரணமாக அலைகளின் வேகம் தணிந்தது. இதனால் நாகைமாவட்டத்தின் தெற்கு மற்றும் தென் மேற்குப் பகுதிகள் பேரழிவிலிருந்து தப்பின.

ராமர் பாலம் உடைக்கப்பட்டால், கடல் நீர் முழுமையாக எழுந்து தனுஷ்கோடியைத் தாண்டி வரும் அபாயம் உள்ளது. மேலும் கேரள மற்றும்கொங்கன் பகுதிகளின் கடலோரப் பகுதிகளுக்கும் பெரும் ஆபத்து ஏற்படும்.

ராமர் பாலம் இல்லாத நிலையில், மீண்டும் ஒரு சுனாமி ஏற்பட்டால், கேரள, கர்நாடக கடலோரப் பகுதிகளுக்கு பெரும் ஆபத்து ஏற்படும்,உயிரிழப்பை கணக்கிடவே முடியாத அளவுக்கு அழிவு பயங்கரமாக இருக்கும் என்று கூறியுள்ளார் கல்யாணராமன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+