மருத்துவ செலவு, கல்யாண செலவுக்குவேலை பார்த்த வீட்டில் திருடிய பெண்

Subscribe to Oneindia Tamil

சென்னை:தந்தையின் மருத்துவ செலவுக்கும், தனது கல்யாணச் செலவுக்கும் வேலை பார்த்த வீட்டில் திருடிய பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கேசவபெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் தேவராஜ். இவரது வீட்டில் தனலட்சுமி (19) என்ற பெண் வீட்டு வேலைபார்த்து வந்தார்.

இந்த நிலையில் தேவராஜின் வீட்டில் வைத்திருந்த ரூ. 3 லட்சம் பணம் காணமால் போனது தெரிய வந்தது. இதையடுத்து அவர் போலீஸில் புகார்கொடுத்தார்.

போலீஸார் விசாரணை நடத்தியதில் வேலைக்காரப் பெண் தனலட்சுமிதான் அந்தப் பணத்தை திருடியது தெரிய வந்தது. இதுகுறித்து போலீஸாரிடம்தனலட்சுமி கூறுகையில், எனது தந்தைக்கு உடல் நலம் சரியில்லை. அவருக்கு மருத்துவம் பார்க்க எங்களுக்கு வசதி இல்லை.

அதனால்தான் தேவராஜ் வீட்டிலிருந்து சிறிது சிறிதாக பணத்தை திருடி எனது தந்தைக்கு வைத்தியம் பார்த்தேன். மேலும், எனது கல்யாணச்செலவுக்கும் பணம் தேவைப்பட்டதால் அதற்காகவும் தேவராஜ் வீட்டிலிருந்து பணம் எடுத்தேன் என்றார்.

இதையடுத்து தனலட்சுமி வீட்டில் சோதனை நடத்திய போலீஸார் ரூ. 2 லட்சத்து 33 ஆயிரம் பணத்தை மீட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+