செக்ஸ் கோச் சுரேசுக்கு ஜாமீன் மறுப்பு
செங்கல்பட்டு:செக்ஸ் திருவிளையாடல் புரிந்ததாக மனைவியால் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள டென்னிஸ் பயிற்சியாளர் சுரேஷ்குமாருக்கு ஜாமீன்வழங்க செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றம் மறுத்து விட்டது.
சென்னை பாலவாக்கத்தைச் சேர்ந்த டென்னிஸ் பயிற்சியாளர் சுரேஷ்குமார் மீது அவரது மனைவி தீபா சமீபத்தில் சென்னை போலீஸில் பரபரப்புபுகார் கூறினார்.
தன்னை அடித்து சித்திரவதை செய்கிறார், பெண்களுடன் தனது கண் .ன்பாகவே செக்ஸ் களியாட்டத்தில் ஈடுபடுகிறார், பயிற்சிக்கு வரும்மாணவிகளிட.ம், அவர்களது தாயார்களுடனும் செக்ஸ் விளையாட்டில் ஈடுபடுகிறார் என்று குற்றம் சாட்டியிருந்தார்.
இதையடுத்து சுரேஷ்குமாரை, குடும்பப் பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் தன்னை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி சுரேஷ்குமார் செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனுசெய்திருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதி மோகன்தாஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சுரேஷ்குமாருக்கு ஜாமீன் வழங்க போலீஸ் தரப்புகடுமையாக ஆட்சேபித்தது.
இரு தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டிருப்பதால் அவரைஜாமீனில் விட முடியாது என்று கூறிய நீதிபதி, மனுவைத் தள்ளுபடி செய்தார்.












Click it and Unblock the Notifications