வேலைக்காரிக்கு வந்த காரை லவட்டிய இந்திய தம்பதி

Subscribe to Oneindia Tamil

துபாய்:வேலைக்காரப் பெண்ணின் பெயரில் விழுந்த லாட்டரிப் பரிசை (கார்) அவருக்கு தராமல் ஏமாற்றி விட்ட இந்திய தம்பதி மீது துபாய் நீதிமன்றத்தில்வழக்கு தொடரப்பட்டுள்ளது.

துபாயில் 2004ம் ஆண்டு நடந்த ஷாப்பிங் திருவிழாவில் கலந்து கொண்ட துபாய் வாழ் இந்தியத் தம்பதியான ஜே.எஸ் மற்றும் அவரது மனைவிஎப்.எஸ் (இப்படித்தான் துபாய் போலீஸார் அந்தத் தம்பதியின் பெயர்களைத் தெரிவித்துள்ளனர்) ஆகியோர் அங்கு லாட்டரிப் போட்டியில் கலந்துகொண்டனர்.

தங்களது வீட்டு வேலைக்காரப் பெண்ணின் பெயரில் 2400 ரூபாய்க்கு லாட்டரிச் சீட்டை அவர்கள் வாங்கினர். அந்த லாட்டரிச் சீட்டுக்கு ஒரு கார்பரிசாகக் கிடைத்தது.

இதுதொடர்பான தகவலை துபாய் ஷாப்பிங் திருவிழா நிர்வாகிகள் அந்த வேலைக்காரப் பெண்ணின் பெயருக்கு அனுப்பினர். மேலும்,அவருக்குரிய காரையும் இந்தியத் தம்பதியிடம் ஒப்படைத்தனர். இந்தக் காரின் மதிப்பு இந்திய மதிப்பில் ரூ. 47 லட்சத்து 62 ஆயிரத்து 874 ஆகும்.

ஆனால் இந்தக் காரை வேலைக்காரப் பெண்ணிடம் இந்தியத் தம்பதி தராமல் தாங்களே வைத்துக் கொண்டனர். அதேசமயம், அந்தப் பெண்ணுக்குவெறும் 97 ஆயிரம் ரூபாயை மட்டும் கொடுத்தனர். பின்னர் அந்தப் பெண் துபாயிலிருந்து அவரது நாட்டுக்குப் போய் விட்டார்.

இந்த நிலையில் வேலைக்காரப் பெண்ணின் பெயரைப் பயன்படுத்தி லாட்டரிச் சீட்டு வாங்கி விட்டு, அதற்குரிய பரிசை அப்பெண்ணுக்குத் தராமல்ஏமாற்றி விட்டதாக இந்தியத் தம்பதி மீது துபாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வேலைக்காரப் பெண்ணுக்குரிய பரிசைத் தராமல் அவருக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டதாக இந்தியத் தம்பதி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் இந்தியத் தம்பதிக்கு கடும் சிறைத் தண்டனை கிடைக்கும் என்று வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

நம்பிக்கை மோசடிக் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள இந்தியர் ஜே.எஸ் முதலீட்டாளராக உள்ளார். அவரது மனைவி ஒரு டாக்டர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+