புலிகள் நடமாட்டம் அதிகரிப்பு: ஈ.வி.கே.எஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:தமிழகத்தில் விடுதலைப் புலிகள் நடமாட்டம் அதிகரித்து விட்டது. இது கவலை தருவதாக உள்ளது என்று மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர்ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தில் சமீப காலமாக விடுதலைப் புலிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதுகவலை தருவதாக உள்ளது. இதை ஒடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு மத்திய அரசு முழு ஆதரவு தரும்.

அதேபோல, சமீப காலமாக தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவதும் அதிகரித்து வருகிறது. இதுவும் கவலை தருவதாகஉள்ளது.

தமிழக மீனவர்களின் நலனைக் கருதி இதுதொடர்பாக விரைவில் மத்திய அரசு, இலங்கை அரசுடன் பேச்சு நடத்தும்.

மதுரை மேற்கு தொகுதியில் 2006 மே மாதம் நடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிதான் போட்டியிட்டது. எனவே இடைத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியே கண்டிப்பாக போட்டியிடும்.

காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றிக்கு திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் முழுமையான ஆதரவு தந்து உதவும் என்றுநம்புகிறேன் என்றார் இளங்கோவன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+