பாம்பனில் மீனவர்கள் நாளை உண்ணாவிரதம்
ராமேஸ்வரம்:இலங்கை கடற்படையினரின் தாக்குதலைக் கண்டிக்கும் வகையில் பாம்பனில் நாளை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. சமீபத்தில் நடந்த தாக்குதலில் பாம்பன் பகுதி மீனவர்கிறிஸ்டோபர் பலியானார். இதனால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.
இலங்கை கடற்படையின் இந்த வெறித் தாக்குதலைக் கண்டித்து ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில், நாளை முழு அடைப்பு நடத்தப்படும் எனஅத்தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ஹசன் அலி அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் நாளை பாம்பனில் கண்டன உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு, புதுச்சேரி மீனவர் கூட்டமைப்புஅறிவித்துள்ளது.
உண்ணாவிரதத்தில் மீனவர் சமுதாயம் பெரும் திரளென கலந்து கொள்வது என்றும், மீனவர்கள் யாரும் அன்றைய தினம் கடலுக்குப் போகக் கூடாதுஎனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications