மதுரையை வரட்ட போகும் தண்ணீர்ப் பஞ்சம்
மதுரை:வைகை அணையின் நீர்மட்டம் படு மோசமாக இருப்பதால் மதுரை மாநகரில் பெரும் குடிநீர்ப் பஞ்சம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
வைகையிலிருந்து மதுரை நகருக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 28 அடிக்கும் குறைவாக உள்ளது. இந்த28 அடியில் 20 அடிக்கு வெறும் சேறும், சகதியும்தான் உள்ளது. 8 அடி தண்ணீரைக் கொண்டுதான் நகருக்கு குடிநீர் விநியோகம் செய்யவேண்டியுள்ளது.
இதனால் நகருக்கு தடையின்றி நீர் வழங்குவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் மதுரை நகரில் பெரும் குடிநீர்ப் பஞ்சம் ஏற்படும் என்றஅச்சம் எழுந்துள்ளது.
கோடை காலம் வேறு நெருங்கி விட்டதால் மதுரை நகரின் குடிநீர்த் தேவையை சமாளிப்பது மிகவும் கடினம் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.தலைநகர் சென்னையை கோடை காலத்தில் தண்ணீர்ப் பஞ்சம் பேயாய் பிடித்து ஆட்டுவது போன்ற ஒரு நிலை மதுரைக்கு வந்து விடுமோ என்றுமதுரை மக்களும் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.
இப்போதே தண்ணீர்ப் பஞ்சம் தனது பல்லைக் காட்ட ஆரம்பித்து விட்டது. ஒரு குடம் குடிநீர் ஒரு ரூபாய்க்கு விற்க ஆரம்பித்துள்ளது. கோடைநெருங்க நெருங்க விலையும் ஏறும் என்று மக்கள் கூறுகிறார்கள்.
மதுரை மேற்குத் தொகுதியில் இடைத் தேர்தல் நெருங்கி வருவதால், குடிநீர்ப் பிரச்சினையை சமாளிக்க திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளைஎடுக்க ஆரம்பித்துள்ளது.
மதுரை நகர குடிநீர் தேவையை சமாளிக்க மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து மாநகராட்சி மேற்பார்வைப் பொறியாளர்சக்திவேல் கூறுகையில், வைகை 2வது குடிநீர்த் திட்டத்திற்கு தற்போது அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
இதன் மூலம் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு அதைத் தேக்கி வைத்து மதுரை மக்களுக்குவிநியோகம் செய்யத் திட்டமிட்டுள்ளோம்.
இப்போதைக்கு குடிநீர்ப் பஞ்சம் இல்லை. எந்தப் பிரச்சினையும் இல்லை என்றார் அவர்.
ஆனால் சக்திவேல் சொல்வது போல பிரச்சினை இல்லாமல் இல்லை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். குடிநீருக்கு மட்டும் பிரச்சினை இல்லை,மே மாதம் நடைபெறவுள்ள சித்திரை திருவிழாவின்போது கள்ளழகர் ஆற்றில் இறங்கக் கூட தண்ணீர் இல்லாத நிலைமை ஏற்படும் என்று மதுரைமக்கள் அஞ்சுகிறார்கள்.
கவலைப்படாதீகப்பு, ஆத்தா மீனாட்சி எப்படியும் காப்பாத்திருவா!












Click it and Unblock the Notifications