தமிழ்: கருணாநிதிக்கு மத்திய அரசு உறுதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆட்சி மொழியாக தமிழை அறிவிக்க கோரும் தமிழக சட்டசபையின் தீர்மானம்குறித்து மீண்டும் பரிசீலிக்கப்படும், குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற நடவடிக்கை எடுக்கப்படும் எனமத்திய சட்டத்துறை அமைச்சர் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதிக்கு அவர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தங்களது கடிதத்தைநான் கூர்ந்து படித்தேன். தங்களின் கோரிக்கை குறித்து உரிய முறையில் பரிசீலனை செய்யுமாறு சட்டத்துறைஅதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளேன். தாங்கள் எழுப்பியுள்ள கோரிக்கைகளைப் பரிசீலிக்குமாறும்கேட்டுக் கொண்டுள்ளேன்.

மேலும் இது தொடர்பாக முடிந்த வரை விரைவில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறவும் நடவடிக்கைஎடுக்கப்படும் என்று கூறியுள்ளார் பரத்வாஜ்.

சென்னை உயர்நீதிமன்ற ஆட்சிமொழியாக தமிழை அறிவிக்கக் கோரும் சட்டசபை தீர்மானத்தை பரிசீலித்தமத்திய அரசு, உச்சநீதிமன்றத்தின் அறிவரையின்படி இப்போதைக்கு இதை அமல்படுத்த இயலாது என்று கூறிதமிழக அரசிடமே திருப்பி அனுப்பி விட்டது. இதனால் கோபமடைந்த முதல்வர் கருணாநிதி, பிரதமருக்கும்,சட்டம் மற்றும் உள்துறை அமைச்சருக்கும் நீண்ட கடிதம் எழுதியிருந்தார்.

அதன் விளைவாக தற்போது இந்த விவகாரம் குறித்து மீண்டும் பரிசீலிக்கப்படும் என சட்டத்துறை அமைச்சர்தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+