ரூ. 25 கோடியில் சென்னை கடற்கரை சீரமைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:சென்னை நகரில் உள்ள கடற்கரைகள் ரூ. 25 கோடி செலவில் சீரமைத்து, அழகுபடுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சியில் தாக்கல்செய்யப்பட்ட பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2007-08ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட் நேற்று மாமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நிதிக்குழுத் தலைவர் ராதா சம்பந்தன்பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். அதில் உள்ள முக்கிய அம்சங்களை மேயர் மா.சுப்ரமணியன் வாசித்தார்.
இந்த பட்ஜெட் தாக்கலில் ஒரு விசேஷம் இருந்தது. 300 ஆண்டு கால பாரம்பரியம் மிக்க சென்னை மாநகராட்சியில் இதுவரை பெண் யாரும்பட்ஜெட்டைத் தாக்கல் செய்ததில்லை. .தல் .றையாக ராதா சம்பந்தன் அந்தப் பெருமையை நேற்று பெற்றார். இவர் மாநகராட்சிப் பள்ளியில்ஆரம்பப் பாடத்தைப் படித்தவர் என்பது கூடுதல் விசேஷம்.
பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
- சென்னையில் மெரீனா, எலியட்ஸ், தலைமைச் செயலக பகுதி கடற்கரையை சீர்படுத்தி, அழகுபடுத்த ரூ. 25 கோடி ஒதுக்கீடு.
- சென்னை நகரில் போக்குவரத்தை சீர்படுத்த தங்கசாலை சந்திப்பு, பேசின்பாலம் சந்திப்பு, லஸ் சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் புதிய
- மேம்பாலங்கள். பால கட்டுமானப் பணிக்கு ரூ. 40 கோடி ஒதுக்கீடு.
- சென்னை நகர சாலைகள் மேம்பாட்டுக்கு ரூ. 183 கோடி.
- 15 இடங்களில் எஸ்கலேட்டர் வசதியுடன் கூடிய பிளாட்பார மேம்பாலங்கள்.
- மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் கட்டடத்தை சீரமைக்க ரூ. 18 கோடி.
- 350 பேருந்து நிறுத்தங்களில் அதி நவீன நிழற்குடைகள்.
- நகரின் 10 இடங்களில் உடற் பயிற்சி செய்ய நவீன ஜிம்கள்.
- மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச இருதய சிகிச்சைத் திட்டம்.
- தற்காலிகப் பணியில் உள்ள 195 இடுக்காட்டு ஊழியர்களுக்கு (வெட்டியான்கள்) பணி நிரந்தரம்.
- தெருவில் திரியும் நாய்களைப் பிடிக்க ரூ. 18 லட்சத்தில் புதிய வாகனங்கள்.
- மாநகராட்சி சார்பில் 3 இடங்களில் ரூ. 1.60 கோடி மதிப்பில் இறைச்சி வெட்டும் கூடங்கள்.
- முக்கிய சாலைகளில் ரூ. 1 கோடியில் 10 ஆயிரம் மரக் கன்றுகள் நடும் திட்டம் என்பன உள்ளிட்ட பல அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
- பட்ஜெட்டில் புதிதாக எந்த வரிவிதிப்பும் இல்லை.












Click it and Unblock the Notifications