தைலாபுரம் தைலமும், கருணாநிதியும்!
சென்னை:தைலாபுரத்திலிருந்து எங்களது நோய்க்கு தைலம் கிடைத்தால் வரவேற்போம் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதி நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தமிழக அரசை தைலாபுரம்தான் (பாமக நிறுவனர் ராமதாஸின் வீடுஇங்குதான் உள்ளது) இயக்குவது போலத் தெரிகிறதே என்ற கேள்விக்கு, தைலாபுரத்திலிருந்து எங்களது நோய்க்கு தைலம் கிடைத்தால்வரவேற்போம் என்று புன்னகையுடன் கூறினார்.
முக்கியப் பிரச்சினைகள் குறித்து கலந்து ஆலோசித்து முடிவெடுக்க திமுக கூட்டணியில் ஒருங்கிணைப்புக் குழுவை அமைக்க வேண்டும் என்றுகூட்டணிக் கட்சிகள் கோரியுள்ளது குறித்த கேள்விக்கு கருணாநிதி பதிலளிக்கையில்,
இதுதொடர்பாக ராமதாஸும், தா.பாண்டியனும் வற்புறுத்தியுள்ளனர். வெளியில் பேசி விட்டு உள்ளே வரலாம் என்கிற ஆசையும், உள்ளே பேசிவிட்டு வெளியே போய் விடக் கூடாது என்ற எண்ணத்திலும்தான் இந்தக் குழுவை அமைக்காமல் உள்ளோம் என்றார் கருணாநிதி.
முக்கிய விஷயங்கள் குறித்துக் கூட்டணிக் கட்சிகளுடன் விவாதிப்பதில்லை என்று ராமதாஸ் கூறியிருக்கிறாரே?
காவிரிப் பிரச்சினை முக்கியமான பிரச்சினைதான். அதுகுறித்து ராமதாஸுடன் ஆலோசித்தோமே என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications