குமரி காட்டில் கேரள திருடன் குண்டு வெடித்து பலி
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை காட்டில், கேரளாவைச் சேர்ந்த சந்தனக் கொள்ளையன் குண்டுவெடித்து பலியான சம்பவத்தால் பரபரப்புஏற்பட்டுள்ளது.
கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரம் அருகே உள்ள வீதுரை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அனில்குமார், கீரிப்பாறை சரக வன ரேஞ்சருக்குதொலைபேசி மூலம் ஒரு தகவல் கொடுத்தார்.
வீதுரையைச் சேர்ந்த சோமன் என்பவர் கீரிப்பாறை காட்டில் குண்டுவெடித்துப் பலியாகி விட்டதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து நாகப்பன்தலைமையில், வனத்துறையினர் காட்டுக்குள் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
இதில் காளிகேசம் என்ற இடத்திற்கு அருகே தோட்டாணி என்ற இடத்தில் சோமனின் உடல் அழுகிய நிலையில் சிதைந்து காணப்பட்டது. கீரிப்பாறைபோலீஸார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.
சோமனின் உடல் அருகே வெடிகுண்டுச் சிதறல்கள், மரம் வெட்டப் பயன்படும் கோடாரி உள்ளிட்ட ஆயுதங்களும் கிடந்தன. சோமனும், அவரதுஆட்களும் கடந்த 9ம் தேதி நாட்டு வெடிகுண்டுகளுடன் இப்பகுதிக்கு வந்துள்ளனர். சந்தன மரத்தை வெட்டிக் கடத்த அவர்கள் வந்துள்ளனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக குண்டு வெடித்து சோமன் பலியாகி விட்டார். அவருடன் வந்தவர்கள் உடலை துணியில் கட்டி எடுத்துச் செல்லமுயன்றனர். ஆனால் வனக் காவலர்கள் ரோந்து வந்ததைப் பார்த்து விட்டு உடலை அப்படியே போட்டு விட்டு தப்பி விட்டனர்.












Click it and Unblock the Notifications