மதுரையில் டைடல் பூங்கா: கருணாநிதி தகவல்
சென்னை:மதுரையில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு விட்டதாகவும், அது தொடர்பான கோப்பில் தான்கையெழுத்தி விட்டதாகவும் முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்த தொழில் வளர்ச்சிக்கான சிறப்புக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம்கருணாநிதி பேசுகையில், சென்னையைத் தாண்டி தமிழகத்தின் பிற நகர்களிலும் தொழில்கள் வளர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனஇக்கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.
மதுரையில் டைடல் பூங்கா அமைப்பதற்கான இடம் பார்த்து, அதை உறுதி செய்து அதற்கான கோப்பில் கையெழுத்துப் போட்டு விட்டுத்தான் இந்தக்கூட்டத்திற்கே வந்தேன். இதை நான் தெரிவித்தபோது அனைவரும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
மதுரையைத் தாண்டி உள்ள ஊர்களில் தொழில் வளர்ச்சி, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி பரவ ஆவண செய்யப்படும். அந்த முயற்சியில்தான் அரசுஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.
இதேபோல நெல்லை, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளிலும் தொழில் வளர்ச்சி பெருக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications