ஜெயலலிதாவின் பால் சரித்திரம்: கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:தமிழக வரலாற்றிலேயே பால் விலையை ஒரே கட்டத்தில் 2 ரூபாய்க்கு ஏற்றி சரித்திரம் படைத்தவர் ஜெயலலிதா மட்டுமே என்று முதல்வர் கருணாநிதிகூறியுள்ளார்.
இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்துள்ள பதிலில், 2001ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்ததும், அதுவரை லிட்டருக்கு ரூ.10.50க்கு விற்றுக் கொண்டிருந்த ஆவின் பாலின் விற்பனை தொகையை ரூ. 12.50 ஆக உயர்த்தி உத்தரவிட்டார் ஜெயலலிதா.
இப்படி தமிழக வரலாற்றிலேயே ஒரே நேரத்தில் 2 ரூபாய்க்கு கட்டணத்தை உயர்த்தி சரித்திரம் படைத்தவர்தான் இந்த ஜெயலலிதா.
அதை மறைத்து விட்டு இப்போது திமுக அரசில் 1.25 ரூபாய் அளவுக்கு பால் விலையை உயர்த்தியதற்காக அவர் கண்டன அறிக்கை வெளியிடுவதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா, அப்படி அறிக்கை விட அவருக்கு அருகதையாவதுஇருக்கிறதா என்று கேட்டுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications