படையெடுத்து கச்சத்தீவை மீட்க வேண்டும்-திருமா
கடலூர்:இலங்கையிடம் நாம் இழந்த கச்சத்தீவை படையெடுத்துச் சென்று மீட்க வேண்டும். கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று கோரி தமிழக சட்டசபையில்தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் செய்தியாளர்களிடம் திருமாவளவன் பேசுகையில், தமிழக மீனவர்கள் என்று தெரிந்து கொண்டு தான் இலங்கைகடற்படை தாக்குதல் நடத்துகிறது, துப்பாக்கியால் சுடுகிறது.
இந்த விவகாரத்தில் இந்தியாவை, இலங்கை அரசு மதிக்கவே மாட்டேன் என்கிறது. இந்தியாவைக் கண்டு அது பயப்படவே இல்லை.
விடுதலைப் புலிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க, இந்திய கடற்படையுடன் இணைந்து, கடல் எல்லையில் ரோந்து செல்ல இலங்கை அரசுவிரும்புகிறது. இதற்காகவே தமிழக மீனவர்களை சுட்டு, கூட்டு ரோந்துக்கு இந்தியாவைப் பணிய வைக்க அது நாடகமாடுகிறது.
தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் இந்திய அரசு அமைதி காத்து வருகிறது. இது மிகவும் வருத்தத்திற்குரியது.
இலங்கை மீது படையெடுக்க வேண்டும், கச்சத்தீவை மீட்டு இந்தியாவுடன் இணைக்க வேண்டும். அதுவரை இலங்கையை அடக்க முடியாது.
1974ம் ஆண்டு கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். இதுதொடர்பாக தமிழக சட்டசபையில்தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து திமுக நடத்திய போராட்டம் ஆறுதல் தருகிறது. தமிழக மீனவர்களைப் பாதுகாக்கவும், தமிழகஎம்.பிக்கள் குடியரசுத் தலைவர், பிரதமரை சந்தித்து மனு கொடுக்க வேண்டும்என்றார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications