அடங்கா 63: தற்கொலைக்கு முயன்ற 20
சென்னை:63 வயதாகும் வீடியோ கடை முதலாளியின் செக்ஸ் லீலைகளைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அந்தக் கடையில் வேலை பார்த்து வரும் 20வயதுப் பெண் தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து முதலாளியை போலீஸார் கைது செய்து சிறையில் தள்ளினர்.
சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் வினோத் குமார். இவருக்கும் மல்லிகா என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்குமுன்பு கல்யாணம் நடந்தது.
20 வயதாகும் மல்லிகா குடும்ப வருமானம் போதவில்லை என்பதால் கொன்னூர் நெடுஞ்சாலையில் உள்ள சிவராமன் (63) என்பவரது வீடியோகடையில் வேலை பார்த்து வருகிறார். மாதம் ரூ. 3,000 சம்பளம் கொடுத்து வருகிறார் சிவராமன்.
சிவராமனுக்கு கல்யாண வயதில் குழந்தைகள் உள்ளனர். ஆனாலும் செக்ஸ் குறும்பு மிக்கவராம் (வைத்திருப்பது வீடியோ கடை ஆச்சே!). தினசரிமல்லிகாவிடம் தனது செக்ஸ் குறும்பைக் காட்டி வந்துள்ளார். ஆரம்பத்தில் லேசு பாசாக ஆரம்பித்தவர் போகப் போக எல்லை மீறத்தொடங்கியுள்ளார்.
மல்லிகா கடையைப் பெருக்கும்போது பின்னால் வந்து நிற்பது, பின்பக்கத்தைத் தட்டுவது, கன்னத்தைக் கிள்ளுவது என சில்மிஷங்களில் ஈடுபட்டுவந்துள்ளார். இத்தனைக்கும் சிவராமனை மல்லிகா அப்பா என்றுதான் மரியாதையாக அழைத்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடையில் வாடிக்கையாளர் யாரும் இல்லாத நேரத்தில் டிவியில் ஆபாச சிடியைப் போட்டு விடுவாராம் சிவராமன். அதைப்பார்க்குமாறு மல்லிகாவையும் வற்புறுத்துவார். அதில் வரும் உடலுறவுக் காட்சிகளைக் காட்டி, இப்படித்தான் உனது வீட்டுக்காரரும் செய்வாரா,செய்யாவிட்டால் சொல், நான் அப்படி செய்கிறேன் என்று கூறி நாக்கில் நரம்பே இல்லாமல் வரம்பு மீறிப் பேசுவாராம்.
இவரது செக்ஸ் சில்மிஷங்களும், ஆபாச செய்ககைளும் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் குடும்ப நிலை கருதி பொறுத்துப் பார்த்துள்ளார்மல்லிகா. ஆனால் கடந்த வாரம் சிவராமன் படு மோசமாக நடந்து கொண்டாராம்.
சுவரில் இருந்த கடிகாரத்தில் நேரத்தை சரியாக வை என்று கூறியுள்ளார் சிவராமன். மல்லிகாவும் ஒரு ஸ்டூல் மீது ஏறி நின்று கடிகாரத்தை சரிசெய்துள்ளார். அப்போது பின்பக்கமாக வந்த சிவராமன், மல்லிகாவைக் கட்டிப் பிடித்து மானபங்கப்படுத்த முயன்றுள்ளார்.
பயந்து அலறிய மல்லிகாவிடம், இதை வெளியில் சொல்லாதே, நான் சொல்வதைக் கேட்டால் மாதம் 5,000 ரூபாய் தருகிறேன் என்று கூறியுள்ளார்சிவராமன்.
ஆனால் இதை ஏற்க மறுத்து விட்ட மல்லிகா அன்று வீடு திரும்பியவுடன் எலிக்கு வைக்கும் விஷத்தை சாப்பிட்டு விட்டார். உடனடியாககீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றனர். அங்கு டாக்டரிடம் நடந்தது குறித்து மேற்கண்டவாறு வாக்குமூலமாககூறினார் மல்லிகா.
அந்த வாக்குமூலத்தையே புகாராக ஏற்றப் போலீஸார், காமவெறி பிடித்த சிவராமனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications