நதிகள் இணைப்பு-தஞ்சையில் பாஜக ஆர்ப்பாட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:தென்ன நதிகளை இணைக்கக் கோரி தஞ்சாவூரில் ஏப்ரல் 2ம் தேதி தமிழக பாஜக சார்பில் மாபெரும்ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கட்சித் தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பில்தமிழகத்தின் நலன் கவனத்தில் கொள்ளப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் கருணாநிதி கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்துக் கட்சிகளுமே பல்வேறுகுறைபாடுகளை சுட்டிக் காட்டியுள்ளன. இந்த பாதக அம்சங்களை நடுவர் மன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுசென்று நிவாரணம் காண மறு ஆய்வு மனு தாக்கல் செய்யலாம் என்ற முடிவும் எட்டப்பட்டுள்ளது. இதுதற்காலிகத் தீர்வாகவே அமையும்.

நதிகளை இணைப்பதுதான் இதுபோன்ற பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக அமைய முடியும். தென்னக நதிகளைஇணைப்பது குறித்து கடந்த வாஜ்பாய் ஆட்சியில் முடிவெடுக்கப்பட்டது. ஆனால் பின்னர் வந்த காங்கிரஸ்கூட்டணி அரசு இந்தத் திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டது.

முதல்வர் கருணாநிதி தற்போது தென்னக நதிகளை இணைக்க ஆதரவு காட்டியுள்ளார், ஆதரவாகப் பேசிவருகிறார். திமுக தற்போது மத்திய அமைச்சரவையிலும், கூட்டணியிலும் இடம் பெற்றுள்ளது. இதைப்பயன்படுத்தி தென்னக நதிகளை இணைக்கும் திட்டத்திற்கு உயிர் கொடுக்க உதவ வேண்டும்.

தென்னக நதிகளை இணைக்கக் கோரி ஏப்ரல் 2ம் தேதி தஞ்சையில் எனது தலைமையில் மாபெரும்ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்தப் போராட்டத்தில் காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகளும் பெரும் திரளாககலந்து கொள்வார்கள் என்று கூறியுள்ளார் கணேசன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+