மீனவர்களின் படகுகளுக்கு ஒரே வண்ணம்!
ராமநாதபுரம்:
ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களின் படகுகளுக்கு ஒரே நிறத்திலான வண்ணம் அடிக்க காவல்துறை முடிவு செய்துள்ளது.
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை படையினரின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் இலங்கை கடற்படைத் தாக்குதலில்பாம்பன் மீனவர் கிறிஸ்டோபர் பலியானார்.
இதையடுத்து அப்பகுதியில் கடும் கொந்தளிப்பு நிலவுகிறது. ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில்குதித்துள்ளனர்.
இந்த நிலையில் மீனவர் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தை தமிழக கூடுதல் டிஜிபி ஜெகன் மோகன் சேஷாத்ரி உள்ளிட்ட அதிகாரிகள் குழு நேற்றுநேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தியது.
இன்று காலை ராமேஸ்வரம் மீனவர்களுடன் ஜெகன்மோகன் சேஷாத்ரி ஆலோசனை நடத்தினார். மீனவர்களின் பாதுகாப்பு குறித்து அவர் விரிவாகஆலோசித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் சேஷாத்ரி பேசுகையில், தமிழக மீனவர்களின் படகுகளை எளிதில் அடையாளம் காண வசதியாக அனைத்துப்படகுகளுக்கும் ஒரே மாதிரியான வண்ணம் கொடுக்க முடிவு செய்யபப்ட்டது.
மேலும், கடலில் மீன் பிடிக்கச் செல்லும்போது தங்களது அடையாள அட்டை, படகுகளின் உரிமம் ஆகியவற்றை மீனவர்கள் தவறாமல் எடுத்துச்செல்ல வேண்டும் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்றார் சேஷாத்ரி.












Click it and Unblock the Notifications