ஆன் லைன் வர்த்தகத்திற்கு தடை கோரும் கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த ஆன் லைன் வர்த்தகத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என முதல்வர் கருணாநிதிகோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இன்று கருணாநிதி எழுதியுள்ள கடிதத்தில், அத்தியாவசியப் பொருட்களின் அதிகரித்து வரும் விலைஉயர்வைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கடந்த 7ம் தேதி தங்களுக்கு எழுதியிருந்த கடிதத்தில் கூறியிருந்தேன்.
ஆன் லைன் வர்த்தகம் காரணமாகவே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு அதிகரித்துள்ளதாக அரசுக்குத் தகவல்கள் வந்துள்ளன. இதன்தாக்கத்தை ஆராய குழு அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதும் இதை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
எனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த உடனடியாக ஆன் லைன் வர்த்தகத்திற்குக் தடை விதிக்க வேண்டும் என்றுகூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications