எழும்பூர் பஸ் நிலையம் ரெடி; 16ம் தேதி திறப்பு
சென்னை :சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் பின்புறம் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம்போக்குவரத்துக்கு 16ம் தேதி திறக்கப்படுகிறது.
சென்னையின் முக்கிய ரயில் நிலையமான சென்டிரல் ரயில் நிலையத்தில் பேருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்துபல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பல பேருந்துகள் இந்த நிலையம் வழியாகஇயக்கப்படுகின்றன.
அதேபோல எழும்பூர் ரயில் நிலையத்தின் பின்புறம் புதிய பேருந்து நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தபேருந்து நிலையம் வருகிற 16ம் தேதி முதல் திறக்கப்படுகிறது. இங்கிருந்து சில வழித்தடங்களில் பேருந்துகள்இயக்கப்படவுள்ளன.
ரயில் நிலையத்தில் இ- டிக்கெட்-ஏடிஎம் வசதி:
இதற்கிடையே, எழும்பூர் ரயில் நிலையத்தில் 5 இடங்களில் இ-டிக்கெட் வசதியுடன் கூடிய ஏடிஎம் அமைக்கஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எழும்பூர் ரயில் நிலையத்தில் 5 இடங்களில் ஏடிஎம் மையங்கள் அமைக்க திட்டமிட்டப்பட்டுள்ளது. இதற்காக 5வங்கிகள் ரயில்வே நிர்வாகத்தை அணுகியுள்ளன.
இ-டிக்கெட் வசதியுடன் ஏடிஎம் மையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்படுகிறது. முன்பதிவு மையங்களில்கூட்ட நெரிசல், நீண்ட நேரம் காத்திருப்பைத் தவிர்க்க இ-டிக்கெட் முறை கொண்டு வரப்படுள்ளது.
வீட்டில் இருந்தபடியோ அல்லது இண்டர்நெட் மையங்களில் இருந்தோ இ-டிக்கெட் பெற முடியும். அந்தவசதியை எழும்பூர் ரயில் நிலையத்தில் அளிக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான மையம் அமைக்கப்படுகிறது.
புறநகர் ரயில் நிலைய பிளாட்பாரம், தென் மாவட்டங்களுக்கு செல்லக் கூடிய ரயில்கள் புறப்படக் கூடியபிளாட்பாரத்தில் ஏடிஎம் மையத்துடன் இ-டிக்கெட் வசதியுடன் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இது தவிர எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ. 3 கோடி செலவில் பயணிகள் வசதிக்காக 2 பிளாட்பாரம்விரிவாக்கப் பணி வேகமாக நடந்து வருகிறது. மயிலாடுதுறை அகலப்பாதை பணி முடியும் போது இந்தபிளாட்பாரம் செயல் பட தொடங்கும்.












Click it and Unblock the Notifications