காவிரி: பிரதமரிடம் கர்நாடக எம்.பிக்கள் மனு
டெல்லி:காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை மத்திய அரசு கெஜட்டில் வெளியிடக் கூடாது என்று கோரி கர்நாடக மாநிலஎம்.பிக்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை கெஜட்டில் வெளியிடக் கூடாது என்று கர்நாடகம் கோரி வருகிறது. கெஜட்டில்வெளியிட்டு விடாமல் தடுக்க பல்வேறு வகையான நடவடிக்கையில் கர்நாடக எம்.பிக்களும், அரசியல்தலைவர்களும் படு மும்முரமாக உள்ளனர்.
இதுதவிர லோக்சபாவிலும் காவிரிப் பிரச்சினை தொடர்பாக விரிவான விவாதத்தை நடத்தி விட கெளடாதலைமையில் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். கெளடாவும் இடையில் பிரச்சினையை ஏற்படுத்திப் பார்த்தார்.
இந்த நிலையில் நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை கர்நாடக எம்.பிக்கள் கூட்டாக சேர்ந்து சந்தித்தனர்.கெளடா தலைமையில் சென்ற இக்குழுவில் கர்நாடக மாநில அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்களும்கலந்து கொண்டனர்.
பாஜக எம்.பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான அனந்தகுமார், ராஜ்யசபா துணைத் தலைவர் ரகுமான்கான்,மத்திய அமைச்சர் ஆஸ்கர் பெர்னாண்டஸ், பாஜக தலைவர் வெங்கையா நாயுடு (இவர் கர்நாடகமாநிலத்திலிருந்து ராஜ்யசபா எம்.பி. ஆனவர், பெங்களூரில் ஒரு மாதிரி பேசுவார், சென்னையில் வேறு மாதிரிபேசுவார்!),
உள்ளிட்ட 27 பேர் இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
நாடாளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் நடந்த இந்த சந்திப்பின்போது, காவிரி நடுவர் மன்றம் மீது18 புகார்களைக் கூறி ஒரு மனுவைக் கொடுத்தனர். தீர்ப்பு தமிழகத்திற்கு சாதகமாக உள்ளது.
கேரளாவுக்கு வழங்கப்படும் 40 டிஎம்சி தண்ணீரும் கூட தமிழகத்திற்கே செல்லும் என்பது உள்பட பல்வேறுபுகார்களை கர்நாடக எம்.பிக்கள் அடுக்கியிருந்தனர்.
இந்தப் பிரச்சினையில் உடனடியாக மத்திய அரசு தலையிட வேண்டும். சுமூகத் தீர்வு காணப்படும் வரை இறுதித்தீரப்பை கெஜட்டில் வெளியிடக் கூடாது என்று கோரப்பட்டிருந்தது.
மனுவை வாங்கிக் கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.












Click it and Unblock the Notifications