இந்திய-இலங்கை ரோந்து: கருணாநிதி விளக்கம்
சென்னை:இந்திய, இலங்கை கடற்படைகள் கூட்டு ரோந்து செல்வதற்கு நான் ஒப்புதல் தந்து விட்டதாக கூறப்படும் செய்தியில் உண்மை இல்லை என்று முதல்வர்கருணாநிதி கூறியுள்ளார்.
தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவங்களைத் தடுக்க இலங்கை கடற்படையும், இந்திய கடற்படையும் பாக் ஜலசந்தியில் கூட்டு ரோந்துமேற்கொள்ளலாம் என இலங்கை அரசு யோசனை தெரிவித்துள்ளது.
சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தில் இதுதொடர்பாக கோரிக்கை மனு கொடுக்கச் சென்ற தமிழக அமைச்சர்கள் குழுவிடமும் இதுதெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த முதல்வர் கருணாநிதி, இரு நாட்டு கடற்படையும் கூட்டு ரோந்து செல்ல முடிவெடுத்துள்ளன. இது வரவேற்புக்குரியதுஎன்று கூறியிருந்ததாக செய்திகள் வெளியாகின.
ஆனால் அதற்கு கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் பாணி அறிக்கையில், சர்வதேச கடல்எல்லையில், இந்திய, இலங்கை கடற்படையினர் கூட்டாக ரோந்து செல்வது குறித்து இறுதி முடிவு எடுக்க வேண்டியது, ஒப்புதல் தர வேண்டியதுமத்திய அரசின் பணி. இதில் எனது முடிவு என்று எதுவும் இல்லை. நான் ஒப்புதல் தர இயலாது.
நான் ஒப்புதல் தந்து விட்டதாக செய்திகள் வந்தால் அது மிகவும் தவறு. மத்திய அரசுதான் இதில் முடிவெடுக்க வேண்டும். நம்மைப் பொறுத்தவரைதமிழக மீனவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும், அவர்கள் பத்திரமாக போய் மீன் பிடிக்க வேண்டும், அந்தச் சூழல் உருவாக வேண்டும் என்பதுதான்என்று கூறியுள்ளார் கருணாநிதி.
சென்னை விமான நிலைய விரிவாக்கப் பணிகளில் தாமதம், சர்ச்சை நிலவி வருவது குறித்த கேள்விக்கு அவர் அளித்த பதிலில், விமான நிலையவிரிவாக்கத்துக்கான இடத்தை எடுப்து குறித்து தமிழகத்தில் எதிர்ப்புகள், பல்வேறு கருத்துக்கள் எடுத்து வைக்கப்படுகின்றன. இதனால் இங்குதாமதம் நிலவுகிறது.
ஆனால் பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்களில் இதுபோன்ற எதிர்ப்பு இல்லை. எனவே அங்கு பணிகள் விரைவாக நடக்கின்றன.சென்னையில், அனைத்துப் பிரிவினரின் கருத்துக்களையும் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டியுள்ளது என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications