தமிழர்களுக்கு பாதுகாப்பு கோரும் மலையாளிகள்
சென்னை:தமிழகத்தில் வசிக்கும் மலையாளிகளுக்கு தமிழக அரசும், தமிழக மக்களும் பாதுகாப்பாக உள்ளனர். அதேபோல, கேரளாவில் வாழும்தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க கேரள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மலையாளிகள் சங்கங்களின் கூட்டமைப்புகேரள முதல்வர் அச்சுதானந்தனுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
இதுதொடர்பாக அச்சுதானந்தனுக்கு கூட்டமைப்பு எழுதியுள்ள கடிதத்தில், கேரளாவில் உள்ள தமிழர்கள் மீதும், தமிழக வாகனங்கள் மீதும் தாக்குதல்நடப்பதாக தமிழக முதல்வர் கருணாநிதி கவலை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் 43 லட்சம் மலையாளிகள் உள்ளனர். தமிழக மக்களுடன் இணக்கமாக, நல்லுறவுடன் நாங்கள் வாழ்ந்து வருகிறோம். தமிழக அரசும்,மக்களும் எங்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கி வருகின்றனர்.
எனவே, கேரளத்தில் தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலால், தமிழகத்தில் தற்போது நிலவும் சுமூக நிலையில் பாதிப்பு ஏற்படும் நிலைஉருவாகியுள்ளது. எனவே கேரளத்தில் உள்ள தமிழர்களுக்கும், அவர்களது உடமைகளுக்கும் உரிய பாதுகாப்பை வழங்க கேரள அரசு உரியநடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications