ராணுவத் தாக்குதலில் 8 புலிகள் பலி
மட்டக்களப்பு:மட்டக்களப்பில் நடந்த கடும் சண்டையில், விடுதலைப் புலிகள் அமைப்பின் மட்டக்களப்புப் பிரிவு உளவுப் படைத் தலைவர் உள்ளிட்ட 8 பேர்உயிரிழந்தனர்.
இலங்கையின் கிழக்கில் உள்ள மட்டக்களப்பைப் பிடிக்க ராணுவம் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்காக கடந்த சில நாட்களாகமட்டக்களப்பில் கடும் தாக்குதலை தொடுத்துள்ளது.
மக்கள் நெருக்கம் நிறைந்த பகுதிகளிலும் பீரங்கி மற்றும் விமானத் தாக்குதலை மேற்கொண்டிருப்பதால், தமிழர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்குஇடம் பெயர்ந்து வருகின்றனர். இதுவரை 1 லட்சம் தமிழர்கள் இடம் பெயர்ந்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வனப் பகுதிகளில் உள்ள விடுதலைப் புலிகளின் முகாம்கள் மீது ராணுவம் மிக் ரக போர் விமானங்கள் மூலம் குண்டு வீசித் தாக்குதல்நடத்தி வருகிறது. தொப்பிகலா பகுதியில்தான் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது.
அத்தோடு பீரங்கித் தாக்குதலும் தொடர்கிறது. நேற்று நடந்த கடும் சண்டையில் புலிகள் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட உளவுப் பிரிவு தலைவர்இரக்கியன் உள்ளிட்ட 8 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. 20 விடுதலைப் புலிகள் உயிரிழந்துள்ளதாக ராணுவத் தரப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications