இலங்கையின் சதி-கருணாநிதி நெடுமாறன் எச்சரிக்கை
சென்னை:தமிழக மீனவர்களைக் காக்க கடலில் கூட்டு ரோந்து என்ற சதித் திட்டத்தை இலங்கை அரசு முன்வைத்துள்ளது.இதை முளையிலேயே கிள்ளி எறிய முதல்வர் கருணாநிதி முனைய வேண்டும் என தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதைத் தடுக்க இந்தியா மற்றும் இலங்கைகடற்படைகள் இணைந்து கூட்டு ரோந்து செல்லலாம் என இலங்கை யோசனை தெரிவித்துள்ளது.
இது தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் என முதல்வர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.இலங்கையின் வட கடல் பகுதியில் விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. இதை இலங்கைகடற்படையால் வெல்ல முடியவில்லை.
எனவேதான் இந்திய கடற்படையை, விடுதலைப் புலிகளுடன் மோத விட்டு தாங்கள் நழுவிக் கொள்ளமுயலுகிறது. இலங்கை அரசின் இந்த சதித் திட்டத்தை முளையிலேயே கிள்ளி எறிய முனையாமல், அதற்குஆதரவு தரும் போக்கினை முதல்வர் கருணாநிதி கைவிட வேண்டும் என்று கூறியுள்ளார் நெடுமாறன்.












Click it and Unblock the Notifications