பாலு மீதான முற்றுகை: ராமதாஸ் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:கடல்சார் பல்கலைக்கழக மசோதாவை தாக்கல் செய்ய முயன்ற மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவை மேற்கு வங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிஎம்.பிக்கள் முற்றுகையிட்டு, மசோதாவைப் பறிக்க முயன்ற செயல் மிகவும் வருத்தத்திற்குரிய, துக்ககரமான ஒன்றாகும் என்று பாமக நிறுவனர்டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தேதிய கடல் சார் பல்கலைக்கழக சட்ட மசோதாவை மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுமக்களவையில் அறிமுகம் செய்தபோது, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் அதைத் தடுத்து நிறுத்திய விதம் மிகவும் வேதனைக்குரியதாகும்.வருத்தத்திற்குரியதாகும்.

இந்த நிகழ்வும், அதையொட்டி நடைபெற்ற தள்ளுமுள்ளு, கைகலப்பு ஆகியவை, மக்களவைத் தலைவர் கூறியதைப் போன்று, இந்திய நாடாளுமன்றவளாகத்தில் துக்கரகமான ஒன்றாகும்.

சென்னையில் கடல் சார் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்பது திடீரென எடுக்கப்பட்ட முடிவு அல்ல. கடந்த ஒராண்டாகவே பேசப்பட்டுவரும் ஒன்று. சட்ட மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்யலாம் என்று மக்களவைத் தலைவர் அனுமதி அளித்துள்ளார்.

இவ்வளவு இருந்தும் எந்தவொரு கட்டத்திலும் இந்த சட்ட முன்வடிவை எதிர்க்காமல் இருந்து விட்டு, அவையின் அனுமதியுடன் அமைச்சர் பாலுஅறிமுகம் செய்ய முற்பட்டபோது அவரது கைகளைப் பற்றி இழுத்து, சட்ட முன்வடிவு நகலைப் பறித்து கிழித்து எறிய முற்பட்டிருப்பது மிகவும்வருந்தத்தக்கச் செயலாகும்.

தங்களது மாநிலத்திற்கு இப்படி ஒரு பல்கலைக்கழகம் வேண்டும் என்று மேற்கு வங்கத்தினர் கோருவது அவர்களது உரிமை. அதற்குப் பதிலாகசென்னையில் அமையக் கூடாது என்று கூறுவதற்கு அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை.

என்ன ஆனாலும், சென்னையில் கடல் சார் பல்கலைக்கழகம் அமைந்தே தீர வேண்டும். அதில் மத்திய அரசும், அமைச்சர் டி.ஆர்.பாலுவும் உறுதியாகஇருந்து நிறைவேற்ற வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+