பாம்பன் மீனவர் சுடப்பட்ட கடல் பகுதியில்தமிழக காவல் அதிகாரிகள் ஆய்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை:இலங்கை கடற்படையினரால் பாம்பன் மீனவர் கிறிஸ்டோபர் நடுக் கடலில் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் தமிழக காவல்துறை அதிகாரிகள்நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.

பாம்பன் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது சில நாட்களுக்கு முன்பு இலங்கை கடற்படை திடீர் தாக்குதல் நடத்தியது. அவர்கள் நடத்தியதுப்பாக்கிச் சூட்டில் கிறிஸ்டோபர் என்ற மீனவர் பலியானார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், கிறிஸ்டோபர் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தை தமிழக காவல்துறை உயர் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வுசெய்தனர்.

கடலோர பிரிவு காவல்துறை கூடுதல் டிஜிபி ஜெகன், கூடுதல் டிஜிபி மோகன் சேஷாத்ரி, கடலோரக் காவல்படை கமாண்டர் ராஜேந்திர சிங்,உளவுப் பிரிவு கூடுதல் டிஜிபி நாஞ்சில் குமரன், தென் மண்டல ஐஜி சஞ்சீவ் குமார் ஆகியோர் இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.

ராமநாதபுரம் வந்த அவர்கள் அங்கிருந்து குட்டி விமானம் மூலம் உச்சிப்புளி கடற்படைத் தளத்திற்குச் சென்றனர். பின்னர் கார் மூலம் மண்டபம்கடலோரக் காவல் படை முகாமுக்கு சென்றனர். அங்கிருந்து ஹோவர்கிராப்ட் மூலம் கடலுக்குள் சென்றனர்.

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட கடல் பகுதியை காவல்துறை அதிகாரிகள் குழு நேரில் பார்வையிட்டது. பின்னர் இந்திய,இலங்கை கடல் எல்லைக்கும் இக்குழு சென்று ஆய்வு செய்தது.

இந்த ஆய்வின்போது என்ன விவாதிக்கப்பட்டது என்பது குறித்து எந்தத் தகவலும் பத்திரிக்கையாளர்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை.அதேபோல இந்தக் குழுவின் வருகை குறித்தும் யாருக்கும் முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை.

முன்னதாக மண்டபத்தில் உள்ள கடலோர பாதுகாப்பு சிறப்பு முகாமுக்கும் காவல்துறை குழு சென்றது. அங்கு தங்கியுள்ள வீரர்களுடன்அதிகாரிகள் பேசினர். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வீரர்களுடன் அதிகாரிகள் கேட்டறிந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+