தூக்கில் தொங்கிய பெண் எஸ்.ஐ.
கடலூர்:கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பெண் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் காவலர் குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலைசெய்து கொண்டார்.
விருத்தாச்சலம் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக இருந்தவர் சுமதி (32). காவலர் குடியிருப்பில் உள்ள வீட்டில் இவர் வசித்து வந்தார்.நேற்று இரவு பணி முடிந்ததும் வீடு திரும்பிய சுமதிக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் சப் இன்ஸ்பெக்டர் முரளியின் மனைவிக்கும் இடையேதகராறு ஏற்பட்டுள்ளது.
அதன் பிறகு தனது வீட்டுக்குள் போய் விட்டார் சுமதி. இன்று காலை அவரது உடல் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டது. சுமதி தற்கொலைசெய்து கொள்ளவில்லை, முரளியும், அவரது மனைவியும் சேர்ந்து அடித்துக் கொலை செய்து விட்டதாக செய்தி பரவியதால் அங்கு பெரும்கூட்டம் கூடி விட்டது.
போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர்கள் சாலை மறியலிலும் குதித்தனர். தகவல் அறிந்ததும் உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து அவர்களைசமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர்.












Click it and Unblock the Notifications