பஞ்சரைத் தடுக்க வருகிறது டிவிஎஸ் மாடல்
சென்னை:அரசுப் பேருந்துகள் பஞ்சர் ஆகி பாதியில் நின்று விடுவதைத் தடுக்க சாலைகளில் உள்ள ஆணிகள், இரும்புத் துண்டுகள் ஆகியவற்றை அகற்றபேருந்துகளில் காந்தத்தைப் பொருத்தும் திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர்கே.என். நேரு கூறியுள்ளார்.
மதுரை மாநகரில் ஒரு காலத்தில் டி.வி.எஸ். நிறுவனம் பொதுப் போக்குவரத்தை நடத்தியது. அப்போது டிவிஎஸ் நிறுவன டவுன் பஸ்கள் சாலையில்போவதற்கு முன்பு ஒரு வாகனம் செல்லும். அந்த வாகனம், சாலையில் கிடக்கும் இரும்புக் கம்பிகள், ஆணிகள் உள்ளிட்ட டயர்களின் எதிரிகளைஅகற்றியபடி செல்லும்.
அந்த வாகனத்தில் காந்தம் பொருத்தப்பட்டு அதன் மூலம் ஆணி, இரும்புத் துண்டுகளை அகற்றும் பணியை டிவிஎஸ் நிறுவனம் மேற்கொண்டது.இதன் மூலம் டிவிஎஸ் நிறுவன பேருந்துகள் பஞ்சர் ஆகாமல், டயர்கள் காப்பாற்றப்பட்டன.
இந்த பலே திட்டம் தற்போது மீண்டும் உயிர் பெறுகிறது. இதுகுறித்து போக்குவரத்து அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில், சாலைகளில்செல்லும்போது வாகனங்களின் டயர்கள் பஞ்சர் ஆவதை தடுக்க, தனியார் நிறுவனத்தின் உதவியோடு சாலைகளில் உள்ள இரும்பு துண்டுகள் மற்றும்ஆணிகள் போன்றவற்றை காந்தம் மூலம் அகற்ற திட்டமிட்டுள்ளோம். இந்த வாகனங்கள் அடிக்கடி சாலைகளில் பயணித்து இரும்புப் பொருட்களைஅகற்றும்.
திமுக ஆட்சியில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லை. அதிமுக ஆட்சியில்தான், எம் சர்வீஸ், எல்லோ லைன், புளூ லைன் போன்றபேருந்துகளுக்கு அரசாணை வழங்கப்பட்டது. அதை நாங்கள் அமுல்படுத்தியுள்ளோம். இந்த பேருந்துகள் 40.கி.மீ வரை செல்கின்றன. மக்கள்இந்தப் பேருந்துகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
வெளி மாநிலங்களுக்கு செல்ல ரூ.52 லட்சம் மதிப்புள்ள வால்வோ பேருந்துகளை வாடகைக்கு எடுத்து ஓட்ட திட்டமிட்டுள்ளோம்.
அதி நவீனமாக அமைக்கப்பட்டு வரும் ஐடி எக்ஸ்பிரஸ் சாலையில், பேருந்து வசதிகள் அதிகரிக்கப்படும். தற்போது இந்த ரூட்டில், சராசரியாக ரூ.95லட்சம் வசூலாகிறது. கூடுதல் பேருந்துகள் மூலம் ரூ. 1 கோடியே 28 லட்சம் அதிக வசூலாகும் என்றார் நேரு.












Click it and Unblock the Notifications