விஜயகாந்த் பக்கத்தில் இடிப்பு ஆரம்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்குச் சொந்தமான கல்யாண மண்டபத்தின் அருகே உள்ள கட்டடங்களை இடிக்கும் பணி தொடங்கி விறுவிறுப்பாகநடந்து வருகிறது.

சென்னை கோயம்பேடு சந்திப்பில் புதிய அடுக்கு மேம்பாலம் கட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக விஜயகாந்த்தின் ஆண்டாள் அழகர்கல்யாண மண்டபம் உள்ளிட்ட பல கட்டடங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

தனது மண்டபத்தை இடிப்பதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜயகாந்த் தொடர்ந்த வழக்கு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா அப்பீல் செய்துள்ளார்.

இந்த நிலையில் விஜயகாந்த் மண்டபத்துக்கு அருகே உள்ள கட்டடங்களை இடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. கல்யாண மண்டபத்தின் சுற்றுச்சுவரை ஒட்டியுள்ள கட்டடங்களை தற்போது இடிக்க ஆரம்பித்துள்ளனர்.

விஜயகாந்த் தனது கல்யாண மண்டபத்தின் கையகப்படுத்தப்படும் பகுதியை 4 வாரங்களுக்குள் நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும்என உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. அதன் பின்னர் கல்யாண மண்டபத்தின் பெரும்பகுதியை இடிக்கும் பணி தொடங்கும் எனத் தெரிகிறது.

இதற்கிடையே கல்யாண மண்டபத்தை ஒட்டியுள்ள வீடுகளை இடிக்கும் பணியை அதிகாரிகள் சற்று தாமதப்படுத்தியிருக்கிறார்கள். அங்குகுடியிருப்பவர்கள் 15 நாள் அவகாசம் கேட்டுள்ளதால் இந்த தாமதம் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+