உருதைத் தவிர்க்க பாக். அணிக்கு அறிவுரை
கராச்சி:பேட்டிகளின்போது உருதில் பேசுவதைத் தவிர்க்குமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலர் அறிவுரை கூறியுள்ளது.
மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெறும் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க வந்துள்ளது பாகிஸ்தான் அணி. பாகிஸ்தானிலிருந்துகிளம்பும்போதே, பேட்டிகளின்போது தாங்கள் உருதிலேயே பேசப் போவதாக பாகிஸ்தான் அணி நிர்வாகம் அறிவித்திருந்தது.
அதன்படி தற்போது பாக். அணி வீரர்கள் அளித்து வரும் பேட்டிகளில் உருதிலேயே பேசி வருகின்றனர். அவர்கள் பேசுவதை உருதும், ஆங்கிலமும்தெரிந்த ஒரு மொழி பெயர்ப்பாளர் மொழி பெயர்த்துக் கூறி வருகிறார்.
இது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு அதிருப்தியைக் கொடுத்துள்ளது. பாகிஸ்தான் அணியின் மீடியா மேலாளர் பர்வேஸ் மிர், மேலாளற் தலத்அலி ஆகியோரிடம், இனிமேல் உருதில் பேட்டிகள் கொடுக்கக் கூடாது, ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின்மீடியா மேலாளர் பிரையன் முர்கட்ராய்ட் கூறியுள்ளாராம்.
பேட்டிகளுக்கு ஐசிசி நேரம் நிர்ணயித்துள்ளது. அதற்குள் பேட்டிகளை முடிக்க வேண்டும். ஆனால் உருதில் பேசுவதால் அதிக நேரம் ஆகிறது.எனவே இனிமேல் உருதில் பேசுவதைத் தவிர்க்க வேண்டும், அதை அனுமதிக்க முடியாது. ஆங்கிலத்தில்தான் பேட்டிகள் அமைய வேண்டும் என்றுபாகிஸ்தான் நிர்வாகத்துக்கு ஐசிசி கூறியுள்ளதாம்.
பாக். வீரர்கள் உருதில் பேசுவது புரியாமல் சில சர்வதேச பத்திரிக்கையாள்கள்தான் ஐசிசியிடம் புகார் கூறியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்தேஇந்த அட்வைஸை அளித்துள்ளது ஐசிசி.
உருதில் பேச வேண்டும் என்ற முடிவை பாக் அணியின் மீடியா மேலாளர் பர்வேஸ் மிர்தான் எடுத்தார். அதுவும் உலகக் கோப்பைப் போட்டிக்குக்கிளம்பும் நேரத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அப்போதே இதற்கு கேப்டன் இன்சமாம் உல் ஹக் எதிர்ப்பு தெரிவித்திருந்தார் என்பதுநினைவிருக்கலாம்.
ஆனால், உருது மொழியை உலக அளவில் பிரபலமாக்க இது உதவும். எனவே உருது மொழியை உலகம் முழுவதும் அறியச் செய்ய இது நல்லவாய்ப்பு என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் டாக்டர் நஸீம் அஷ்ரப் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications