விமான நிலையத்தில் இலங்கைத் தமிழர் மரணம்
சென்னை:டெல்லி செல்வதற்காக சென்னைக்கு வந்த இலங்கைத் தமிழர், மாரடைப்பால் விமான நிலையத்தில்மரணமடைந்தார்.
இலங்கையைச் சேர்ந்தவர் பையேசன் (68). கொழும்பிலிருந்து தனது மனைவி லலிதா (60), மகள் சுபா (30)ஆகியோருடன் ஏர் சஹாரா விமானம் மூலம் நேற்று சென்னைக்கு வந்தார்.
பின்னர் டெல்லி செல்ல விமானத்திற்கான டிக்கெட்டைப் பெற அவர்கள் வரிசையில் காத்திருந்தபோது திடீரெனபையேசனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அப்படியே அவர் சுருண்டு விழுந்தார்.
உடனடியாக விமான நிலைய மருத்துவர்கள் விரைந்து வந்து பையேசனை ப>சோதித்தனர். அவர் இறந்து விட்டதுதெரிய வந்தது. இதையடுத்து பிரேதப் ப>சோதனைக்காக அவரது உடல் குரோம்பேட்டை அரசுமருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
பையேசனின் உடலை கொழும்பு கொண்டு செல்ல இலங்கை தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவத்தால் டெல்லி செல்லும் விமானம் 20 நிமிடங்கள் தாமதமாக கிளம்பிச் சென்றது.












Click it and Unblock the Notifications