ஆசிரியர்கள் ஓய்வு வயது 65 ஆகிறது
டெல்லி:மத்திய அரசுப் பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்களின் ஓய்வு வயதை 65 ஆக உயர்த்த மத்திய அரசு தீர்மானித்துள்ளது. காலியிடங்கள்அதிகம் இருக்கும் பள்ளிகளில் 70 வயது வரை ஆசிரியர்கள் பணியாற்றலாம் எனவும் மத்திய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் ஏராளாமான காலி இடங்களில் நிரப்பபப்படாமல் உள்ளன. மத்திய அரசு பள்ளிகளில் பணிபுரியும்ஆசிரியர்களின் ஓய்வு வயது தற்போது 62 ஆக உள்ளது. இதை 65 ஆக உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
காலி இடம் நிரப்பப்படாமல் இருந்தால் 70 வயது வரை ஆசிரியர்கள் பணியாற்றலாம் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வீரப்ப மொய்லி தலைமையிலான குழு உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு 27 % இட ஒதுக்கீடு வழங்கபரிந்துரை செய்துள்ளது. அதே நேரத்தில் பொது பிரிவு மாணவர்களுக்கும 54% குறையக்கூடாது என்றும் கூறியுள்ளது.
இந்த இட ஒதுக்கீட்டை அமல்படுத்தும்போது கூடுதல் மாணவர்கள் கல்வி கற்கும் நிலை உருவாகும், இதன் காரணமாக ஆசிரியர்கள் தேவைமேலும் அதிகரிக்கும். இதையும் கருத்தில் கொண்டே மத்திய அரசு ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயதையும் வேலை பார்க்கும் வயது வரம்பையும்அதிகரித்துள்ளது












Click it and Unblock the Notifications