கை கூடாத காதல்: காதலியின் கணவர் பெயரில்வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது!
சென்னை:காதல் தோற்றுப் போனதால் கடுப்பான காதலன், தனது காதலியின் கணவர் பெயரில் போலீஸாருக்கு போலியான வெடிகுண்டு புரளி கடிதம்அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை சைபர் கிரைம் போலீஸ் பிரிவுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், சென்னை நகரின் முக்கிய இடங்களான ரிப்பன் பில்டிங், ரயில் நிலையங்கள்உள்ளிட்ட இடங்களில் குண்டுகள் வெடிக்கப் போவதாக வாசகம் இருந்தது.
கடிதத்தின் இறுதியில், கம்ப்யூட்டர் கோடிங் எழுத்துக்கள் இருந்தன. இதையடுத்து அந்த மர்ம நபரைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளில் போலீஸார்குதித்தனர். கம்ப்யூட்டர் கோடிங் எழுத்துக்களை கம்ப்யூட்டர் நிபுணர்களைக் கொண்டு ஆராய்ந்ததில் பிரகாஷ் என்றும் அவரது முகவரியும் தெரியவந்தது.
இதையடுத்து திரு.வி.க. நகரில் உள்ள பிரகாஷின் இல்லத்திற்குச் சென்று அவரை பிடித்துச் சென்று விசாரணை நடத்தப்பட்டது. பிரகாஷ் ஒருகம்ப்யூட்டர் பொறியாளர், ஆனால் அவருக்கும், கடிதத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பது தெரிய வந்தது.
இதையடுத்து பிரகாஷின் எதிரிகள் யாரோதான் இதைச் செய்திருக்க வேண்டும் என போலீஸார் சந்தேகப்பட்டனர். பிரகாஷிடம் உங்களுக்குஎதிரிகள் யாராவது உண்டா என்று விசாரித்தபோது ஸ்டாலின் சஜீஸ் என்பவரின் பெயரைச் சொல்லி அதிர்ச்சியூட்டும் தகவலையும் தெரிவித்தார்பிரகாஷ்.
சமீபத்தில்தான் பிரகாஷுக்கு கல்யாணம் ஆகியுள்ளது. அவரது மனைவியை கல்யாணத்திற்கு முன்பு சஜீஸ் ஒரு தலையாக காதலித்துள்ளார். அவரதுகாதலை பிரகாஷின் மனைவி ஏற்கவில்லை. அதன் பின்னர் அவருக்கும், பிரகாஷுக்கும் கல்யாணம் ஆகி விட்டது.
இதனால் கோபமடைந்த சஜீஸ், பல வழிகளில் பிரகாஷையும், அவரது மனைவியையும் தொல்லைப்படுத்தி வந்துள்ளார். பிரகாஷின் மனைவியின்தந்தைக்குத் திடீர் திடீரென தந்தி அனுப்பி சென்னைக்கு வரவழைத்து அதிர்ச்சி தருவாராம்.
இந்த நிலையில்தான் பிரகாஷ் பெயரில் போலியான வெடிகுண்டு மிரட்டல் விடுத்து ஆணையர் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார் சஜீஸ்.
இதையடுத்து சஜீஸின் அலுவலகத்திற்கு போலீஸார் விரைந்தனர். சஜீஸ் எழும்பூரில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலைபார்த்து வருகிறார்.
அலுவலகத்தில் வைத்து சஜீஸை போலீஸார் கைது செய்தனர். அவர் மீது கொலை மிரட்டல், ஆள் மாறாட்டம், இன்னொருவரின் கையெழுத்தைப்போடுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட சஜீஸுக்கு காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் கவுன்சிலிங் நடத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications