டென்னிஸ் கோச்சுக்கு நிபந்தனை ஜாமீன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், மனைவியை கொடுமைப்படுத்தியதாகவும் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் கைது செய்யப்பட்டடென்னிஸ் பயிற்சியாளர் சுரேஷ்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் அளித்துள்ளது.
![]() |
சென்னை பாலவாக்கத்தைச் சேர்ந்த தீபா என்ற பெண் போலீஸில் கொடுத்த புகாரில், என்னை எனது கணவர் அடித்து உதைக்கிறார். என் கண்முன்பாகவே பல பெண்களுடன் உறவு வைத்துக் கொள்கிறார். டென்னிஸ் பயிற்சிக்கு வரும் பெண்களிடமும், மாணவிகளிடமும் தவறாக நடந்துகொள்கிறார் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டார். தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி சுரேஷ்குமார், சென்னை உயர்நீதிமன்றத்தில் முதலில்தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
![]() |
மீண்டும் அவர் தாக்கல் செய்த மனுவை நீதிபதி கே.என்.பாஷா நேற்று விசாரித்தார். பின்னர் சுரேஷ்குமாருக்கு ரூ. 25 ஆயிரம் சொந்த ஜாமீன் மற்றும்அதே தொகையிலான இரு நபர் ஜாமீன் கொடுத்து ஜாமீன் பெறலாம்.
ஜாமீனில் விடுதலையான பிறகு திருச்சியில் தங்கியிருந்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் தினசரி கையெழுத்திட வேண்டும் என நீதிபதி தனதுஉத்தரவில் நிபந்தனை விதித்துள்ளார்.














Click it and Unblock the Notifications