ஜெ. மீது வழக்கு பதியக் கோரிய மனு தள்ளுபடி

Subscribe to Oneindia Tamil

சென்னை:தேர்தல் டிக்கெட் பணத்தைத் திரும்பத் தரத் தவறிய அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கைஎடுக்க உத்தரவிடக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

சென்னையைச் சேர்ந்த ஜியாவுதீன் என்பவர் இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், எம்.பி. தேர்தலில் போட்டியிடஅதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் 15 ஆயிரம் ரூபாய் கொடுத்து டிக்கெட் கேட்டு விண்ணப்பித்தேன். ஆனால் எனக்கு சீட் கிடைக்கவில்லை.

இதேபோல கடந்த சட்டசபைத் தேர்தலிலும் போட்டியிட ரூ. 10 ஆயிரம் கொடுத்து சீட் கேட்டேன். இதையடுத்து நான் கட்டிய டெபாசிட் பணத்தைத்திரும்பக் கேட்டேன். ஆனால் கொடுக்க மறுத்து விட்டார்கள்.

இதுதொடர்பாக ஜெயலலிதாவுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் பதில் இலலை. எனவே எனது தேர்தல் டிக்கெட் டெபாசிட் பணத்தைத் திரும்பித் தரமறுத்த ஜெயலலிதா மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த நிலையில், அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சேதுராமன் தாக்கல் செய்த ஒரு மனுவில், அதிமுக கட்சி விதிப்படி தேர்தலில் டிக்கெட்கேட்டு டெபாசிட் செய்யப்படும் பணத்தைத் திரும்பக் கோர முடியாது. இதுதொடர்பாக கையெழுத்துப் பாட்டு விதிமுறைகளை ஏற்பதாக கூறிவிட்டுத்தான் அனைவரும் பணத்தைக் கட்டுகின்றனர்.

விளம்பரத்துக்காக ஜியாவுதீன் வழக்கு தொடர்ந்துள்ளார். எனவே அவரது மனுவை தள்ளுபடிசெய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். இந்தவழக்கை விசாரித்த நீதிபதி கே.என்.பாஷா, அதிமுக சட்டவிதிப்படி கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்க முடியாது. எனவே மனுதாரரின் மனுதள்ளுபடி செய்யப்படுவதாக தீர்ப்பளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+