பஸ் டே: கல்லூரி மாணவர்கள் அடிதடி-பேருந்துசேதம்- டிரைவருக்கும் அடி, உதை-4 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:சென்னையில் அரசுப் பேருந்தை சேதப்படுத்திய 4 கல்லூரி மாணவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை கிண்டியில், அரசு நந்தனம் கலைக் கல்லூரி மாணவர்கள் பஸ் டே கொண்டாடினர். அப்போது மற்றொரு கல்லூரியை சேர்ந்தமாணவர்களுக்கும் நந்தனம் மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் அரசுப் பேருந்து மீதும் கற்கள் வீசப்பட்டன. பேருந்தின் கண்ணாடிகள் உடைந்தன. இதை தடுக்க முயன்ற பஸ் டிரைவருக்கும் அடி, உதைவிழுந்தது.
இதையடுத்து பேருந்து ஓட்டுனரும் நடத்துனரும் போலீசில் புகார் கொடுத்தனர். இச் சம்பவம் தொடர்பாக நந்தனம் கல்லூரியைச சேரந்த 4மாணவர்கள கைது செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications