நெல்லையில் தொடரும் வன்முறை-கோவில் சிலைகள் உடைப்பு

Subscribe to Oneindia Tamil

நெல்லை:நெல்லையில் கடந்த சில நாட்களாக இரு பிரிவினருக்குமிடையே நடந்து வரும் மோதல் தொடர்ந்து கொண்டுள்ளது.

நெல்லை தச்சநல்லூரில் 2 பிரிவினருக்குமியையே ஏற்பட்ட மோதலில் கண்ணன், குமார் ஆகியோர் வெட்டிக் கொல்லப்பட்டனர். இதனால் அந்தபகுதிகளில் பெரும் பதட்டம் ஏற்பட்டது.

இந்த கொலைகள் தொடர்பாக 9 பேர் தாமகவே போலீசில் சரணடைந்தனர். இந் நிலையில் நேற்று தச்சநல்லூர் பகுதியில் வைக்கோல் படப்புகளுக்குதீ வைக்கப்பட்டதால் மீண்டும் பதட்டம் ஏற்பட்டது. இதனால் அங்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆயுதம் ஏந்திய போலீஸாரும்இரவு பகலாக ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் தாமிரபரணி அருகே பாலசுப்பிரமணி சுவாமி கோவில் மற்றும் ஸ்ரீகுமிளி உடையார் சாஸ்தா கோவில் ஆகிய 2 கோவில்களையும் ஒருகும்பல் சூறையாடியது.

நேற்று நள்ளிரவில் பாலசுப்பிரமணியசுவாமி கோவில் கதவின் மீது பெரிய பாறாங் கல்லை வீசிய கும்பல் கதவை உடைத்தது. பின்னர் கோவில் மீதுதாக்குதல் நடத்தினர்.

மேலும் ஸ்ரீகுமுளி உடையார் கோவில் கதவையும் பாறாங்கல்லை வீசி உடைத்து அங்குள்ள 2 அடி உயரமுள்ள ஆழ்வார் கற்சிலையையும், அதன்அருகே உள்ள சாஸ்தா சிலையும் உடைத்தது.

கோவில் முன் பீர் பாட்டிலை உடைத்தும், யானை உருவ கற்சிலையை அசிங்கப்படுத்திவிட்டும் சென்றது அக் கும்பல்.

இதனால் அங்கு பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+