போராட்டம் மக்களைக் குழப்பும்: கருணாநிதி
சென்னை:காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவதில் சட்டச் சிக்கல்கள் இருக்கும் நிலையில் அதற்காக போராட்டம் நடத்துவது மக்களைகுழப்பவே செய்யும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு தொடர்பாக சட்டரீதியாகத்தான் அணுக வேண்டும்.அரசியல் ரீதியாக இதை அணுகக் கூடாது.
தீர்ப்பு வெளியான 90 நாட்களுக்குப் பிறகே தீர்ப்பை அரசிதழில் வெளியிட முடியுமே தவிர முன்பே வெளியிடுவதற்கு எந்த முன்மாதிரியும்இதுவரை இல்லை.
தீர்ப்பை எதிர்த்து, நமக்குப் பாதகமாக உள்ள அம்சங்களை நீக்கக் கோரி மேல் முறையீடு செய்ய வாய்ப்புகள் இருக்கும்போது எப்படி தீர்ப்பைஅரசிதழில் வெளியிட வற்புறுத்த முடியும்?
தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டால் எந்த மாநில.ம் மேல் முறையீடு செய்ய வாய்ப்பே இல்லாமல் போய் விடும்.
எனவே இதுதொடர்பாக போராட்டம் நடத்துவது என்பது மக்களைக் குழப்பவே பயன்படும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications