பெரியாறு அணையில் கேரள குழு ஆய்வு
Subscribe to Oneindia Tamil
இடுக்கிஃமுல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் கேரள நிபுணர் குழு ஆய்வைத் தொடங்கியுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் வலிமை குறித்து சந்தேகம் கிளப்பி, அணையின் உயரத்தை அதிகரிக்க விடாமல் இடைஞ்சல் செய்து வரும் கேரளஅரசு தற்போது புதிய நிபுணர் குழு ஒன்றை அமைத்துள்ளது.
3 பேர் கொண்ட அந்தப் புதிய குழு, அணையின் பலம், அணைப்பகுதியின் சுற்றுச்சூழல் தன்மை உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து கேரளஅரசிடம் அறிக்கை கொடுக்கும்.
அதன் அடிப்படையில், அணையின் உயரத்தை அதிகரிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் வாதிட அது திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில் கேரள அரசு அமைத்துள்ள புதிய நிபுணர் குழு முல்லைப் பெரியாறு அணையில் தனது 2 நாள் ஆய்வை நேற்று தொடங்கியது.
அணைப் பகுதியில் ஆய்வு நடத்த தமிழக அரசிடம் கேரள குழு அனுமதி வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications