ஸ்ரீரங்கம்: பெரியார் சிலை மீது குங்கும வீச்சு
ஸ்ரீரங்கம்:திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள பெரியார் சிலை மீது குங்குமம் வீச முயன்ற இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் கதிர்வேலுவை போலீஸார் வளைத்துப்பிடித்துக் கைது செய்தனர்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில் அருகே பெரியார் சிலை நிறுவப்பட்டது. முதலில் சிமென்ட் சிலை நிறுவப்பட்டது. இந்த சிலை கடந்த டிசம்பர்மாதம் தகர்க்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்தின் பல பகுதிகளில் பெரும் வன்முறை மூண்டது.
இந்துக் கோவில்களில் தாக்குதல் நடத்தப்பட்டு சுவாமி சிலைகள் தாக்கப்பட்டன. பின்னர் வெண்கலச் சிலை வைக்கப்பட்டு, புதிய சிலையை திமுக.தலைவர் கி.வீரமணி திறந்து வைத்தார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பெரியார் சிலைக்கு 24 மணி நேர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று மதியம் ஒருவர் சிலையைநோக்கி வேகமாக ஓடி வந்தார். தனது கையில் சந்தனம் மற்றும் குங்குமத்தை தண்ணீரில் கரைத்து வைத்திருந்தார்.அதை அப்படியே சிலை வாளியோடு வீசினார். ஆனால் குங்கும, சந்தனக் கரைசல், சிலை மீது படாமல் பீடத்தின் மீது கொட்டியது. இதைப் பார்த்தபோலீஸார் உடனடியாக விரைந்து சென்று அந்த நபரைப் பிடித்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த நபரின் பெயர் கதிர்வேலு என்பதும், இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளராக அவர் உள்ளார்என்பதும் தெரிய வந்தது. அவரை போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications