இந்தோனேஷியாவில் பூகம்பம்: பாதிப்பு இல்லை
Subscribe to Oneindia Tamil
ஜகார்த்தா:இந்தோனேஷியாவின் கிழக்கில் இன்று அடுத்தடுத்து இரு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் இதில் உயிர்ச் சேதமோ, பொருட் சேதமோ இல்லைஎன்று கூறப்படுகிறது.
இந்தோனேசியாவின் பாபுவா மாகாணத்தில் இன்று காலை 7.54 மணிக்கு முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜெயபுரா மாகாணத்தின் வட கிழக்குப்பகுதியில், இந்த நிலநடுக்கத்தின் மையப் பகுதி இருந்தது. இதன் அளவு 5.4 ரிக்டராக இருந்தது.
முன்னதாக, மொலுக்காஸ் தீவில், நள்ளிரவு 1. 12 மணியளவில் 5.9 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடல் நீர்மட்டத்திற்கு கீழே 57 அடிஆழத்தில் டெர்னேட் பகுதியில் இருந்து 126 கி.மீ வடமேற்கு பகுதியில் இதன் மையம் இருந்தது.
இரு நிலநடுக்கங்களிலும் உயிரிழப்போ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.












Click it and Unblock the Notifications